Home > Uncategorized > ஊழலை சமாளிப்பது எப்படி? – காங்கிரஸ்

ஊழலை சமாளிப்பது எப்படி? – காங்கிரஸ்

பல இலட்சம் கோடி ஊழல்கள் நடந்தும் அதை சர்வ சாதாரணமாக ஊதி தள்ளுகிறது காங்கிரஸ். இந்த ராஜ தந்திரத்தை…sorry இந்த 420 வித்தையை எவ்வாறு செய்கிறது. வாங்க தெரிஞ்சகலாம்..

ஒரு காலத்தில் அத்வானி காங்கிரஸ் கட்சி மீது ஹவாலா மோசடி பற்றி குற்றம் சாட்டினார். கடைசியில் அவர்கள் மீதே ஹவாலா மோசடி செய்தார் என்று கேஸ் போட்டது காங்கிரஸ்.

CWG விளையாட்டு போட்டி ஊழலில் 40000 கோடி ஊழல் செய்தது காங்கிரஸ். அதை எதிர்த்து போராடியது BJP. உடனே அந்த காமன்வெல்த் போட்டிக்கு 1.5 கோடி அளவில் அலங்காரம் செய்த ஒருவர் BJP காரர் என்று கூறி அதில் ஊழல் நடந்ததாக அவர் வீட்டில் CBI விட்டு சோதனை செய்தது.

1.76 இலட்சம்… கோடி 2G ஊழல் செய்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடினால், பத்து வருடங்கள் முன்பு பாஜக ஆட்சியிலும் ஊழல் நடந்தது என்று கூறி அவர்கள் மீது CBI விட்டு கேஸ் போட்டது.

கொஞ்ச நாள் முன்னாடி ராம தேவ் கருப்பு பணத்திற்கு எதிராக போராடினார். கடைசியில் அவரே கருப்பு பணம் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தியது.

இப்பொழுது அன்னா ஹசாரே குழு ஊழலுக்கு எதிராக போராடுகிறது. வழக்கம் போல அவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்கிறது.

அனேகமாக BJP இல்  ஒரு கருப்பு பண முதாலாளியை இணைத்து விட்டு பாஜாகவும் கருப்பு பணம் வைத்துள்ளதாக கூறி பிரச்சாரம் செய்யும்.

காங்கிரஸின் வெளி நாட்டு கருப்பு பணத்தில் பயன் பெறும் வெளி நாட்டு மீடியாகளை அப்பாவி இந்தியர்கள் நம்பும் வரையில் இந்த பல இலட்சம் கோடிஊழல் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை காங்கிரஸ் கட்சிக்கு. இது ஒரு கசப்பான உண்மை.

http://www.mediacrooks.com/

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a comment