அணு உலைகளும் மறைக்கப்படும் மர்மங்களும்

எல்லோரும் குறிப்பாக திராவிட கழகங்கள், மாவோயிஸ்டுகள், இலங்கை தமிழர் வாழ்க்கை நாசம் செய்யபடும் பொழுது தூங்கி கொண்டு இருந்த வீரர்கள்  அணு உலையை பற்றியும் அணு உலைகளை பற்றி தான் பக்கம் பக்கமாக எழுதி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதை எல்லாவற்றையும் விட சாதாரண பொது மக்களுக்கு தெரியாத மற்றொறு விசயம் உண்டு. அமெரிக்கா தயாரித்து கொண்டு இருக்கும் சக்தி மிக்க மனித அணுகுண்டுகளை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இது சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிகளை பற்றி பதிவின் முடிவில் விரிவாக எழுதவுள்ளேன்.

மேலே உள்ள படம் தான் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஒட்டு மொத்த மின்சக்தி வரைபடம். இதன் படி வெறும் 3% வீதம் மின்சாரம் தான் அணுமின் நிலையத்தில் இருந்து வருகிறது. நமக்கு அனல் மின் மற்றும் நீர் மின்சக்தியில் இருந்து தான் அதிக மின்சாரம் கிடைக்கிறது. நிலைமை இப்படி இருக்க சிலர் தனது சுய நலத்திற்காக கேடு விளைக்கும் அணு உலையில் மக்கள் வரிபணத்தை கொட்டுகிறார்கள் அது வெடித்தால் பல ஆயிரகணக்கான மக்கள் உயிர் இழப்பார்கள். மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்று பெரிய பந்தல் போட்டு வெள்ளை பாவாடைகளும் சிகப்பு சட்டைகளும் பேசி கொண்டு இருக்கின்றன. இதை பற்றி பேசுவதற்கு முன்பு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு ஒரு விசயம் உள்ளது. அது தான் குறைந்து வரும் நீர் சக்தி மற்றும் எரிசக்தி.

குறைந்து வரும் நிலக்கரி அளவை குறிக்கும் வரைபடம்.

குறைந்து வரும் நீர் வளத்தை குறிக்கும் படம்

மேலே உலகில் இருக்கும் நிலக்கரி உற்பத்தியின் அளவை பற்றிய வரைபடம் உள்ளது. இதன் படி 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆசியா நாடுகளின் மொத்த மின் உற்பத்தில் 50% மின்சக்தி தரும் நிலக்கரி பூஜ்ஜியத்தை நோக்கி செல்ல தொடங்க உள்ளது. ஒட்டு மொத்த ஆசியாவிற்கே இந்த நிலை என்றால் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நிலை? நமது நாட்டின் மொத்த மின்சகதியில் 50% வீதம் மின்சக்தியை தரும் நிலக்கரி 2020 க்கு பிறகு மிக பெரிய அளவில் குறைய தொடங்கும். அதாவது தற்பொழுது 96743.38 MW மின்சாரம் தரும் அனல்மின் உற்பத்தி தோராயமாக வருடம் ஒன்றிற்கு 2000MW குறைய போகிறது. இதை அணுமின் சக்தி இல்லாமல் வேறு எந்த சக்தி ஈடு செய்யும் என்பது பரலோகத்தில் மட்டும் உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.

இது தவிர நமது நாட்டில் இருக்கும் நீர்சக்தி எந்த அளவுக்கு குறைந்து கொண்டு இருக்கிறது என்ற விவரம் நான் சொல்ல தேவையில்லை. இருப்பினும் உலக வங்கியின் ஆய்வு படத்தை மேலே கொடுத்து உள்ளேன். 2020 க்கு பிறகு குடி நீரின் அளவு மிக வேகமாக குறைய போகிறது. கடல் நீரை குடி நீராக்கி பயன்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கும் அதிக அளவு மின்சாரம் தேவை. நமது மரபுசார் மின்சாரம் 2020க்கு பிறகு கேள்வி குறியாக போகும் நிலையில் அணுசக்தியை தவிர வேறு எந்த மாற்று சக்தி இதை செய்ய போகிறது. டாக்டர் பட்டத்தை வாங்கிய கம்யூனிஸ விஞ்ஞானிகளிடம் 1 பில்லியன் மக்களின் நீர் தேவை பூர்த்தி செய்ய ஏதேனும் தீர்வு உள்ளதா?

இதை எல்லாம் விட நமக்கு முன்பு இன்னொரு பிரச்சனையும் உண்டு. அது தான் நமது மக்கள் தொகை பெருக்கம், இதை எல்லாம் கட்டுபடுத்த முயற்சி செய்தால் சிறுபான்மை அடக்கு முறை என்று சொல்கிறார்கள். மக்கள் தொகை குறைப்பு ஒருவனுக்கு ஒருத்தி போன்ற சட்டங்கள் எப்படி சிறுபானமைக்கு எதிரானது என்பது செக்யூலர்வாதிகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். கேரளா, உத்திரபிரதேசம், பீகார் மற்றும் மேற்குவங்க பகுதிகளில் அதிக அளவு மனித உற்பத்தி ஏன் நடந்து கொண்டு இருக்கிறது என்பது எல்லாம் தெரிந்த கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே!!! மேல் சொன்ன அனைத்து பிரச்சனைகளும் அதிகம் உள்ள மாநிலங்களான கேரளா மற்றும் மேற்கு வங்கம் அதிபுத்திசாலி கம்யூனிஸ்டுகளால் தான் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர் கட்சியாகவோ இருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. அணு உலையை அனுமதிக்க மாட்டேன். மக்கள் தொகை பெருக்கத்தையும் கட்டுபடுத்த அனுமதிக்க மாட்டேன் என்றால் என்ன செய்வது?

எதற்கு எடுத்தாலும் மரபுசாரா எரிசக்தியை உபயோகபடுத்தலாமே என்று சொல்லும் சில அரை வெக்காடுகளை வேறு நம் நாட்டில் உள்ளனர். மரபு சாரா எரிசக்தியில் முக்கிய இடம் வகிக்கும் காற்று மற்றும் சூரிய மின்சக்தி. இவை இரண்டுமே எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாத மற்றும் தொடர்ந்து கிடைக்க கூடிய விசயம் அல்ல.

Photovoltaic solar plant
 
 
Solar thermal power plant

53MW மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த photovoltaic solar தொழிற்சாலை ஜெர்மனியில் அண்மையில் கட்டப்பட்டது. இதற்கு செய்யப்பட்ட செலவு 220 million $. இதன் அடிப்படையில் கூடங்குள மின் உற்பத்தி திறனான 2000MW மின்சாரம் உற்பத்தி செய்யும் solar தொழிற்சாலை அமைக்க நமக்கு தேவை > 8500 million $. கூடங்குளத்திற்கு ஆன செலவோ < 3000 million $. இது நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.

சரி இது வேண்டாம் solar thermal energy போகலாம் என்றால் அதற்கும் அணு உலையை விட 2 மடங்கு செலவு செய்ய வேண்டும். அதுவும் தவிர அந்த அளவுக்கு வெப்பம் தர கூடிய மற்றும் நில அமைப்பு தார் பாலைவனத்தில் ஒரு சில இடங்களில் தான் உள்ளது. இது போன்ற அதிகபடியான சூரிய மின்சக்தி சேகரிப்பால் ஏற்படும் வெப்பத்தினால் அதன் சுற்றுபுற பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மக்கள் நிரந்தரமாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டும். அமெரிக்கா போன்ற மக்கள் தொகை குறைந்த நாடுகளுக்கே இது போன்ற தொழில் நுட்பம் சாதாராண விசயம் இல்லை. 2000MW மின்சாரத்தை அதுவும் மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில் தற்போதைய நிலையில் சூரிய ஒளியில் உற்பத்தி செய்வது என்பது நடக்க கூடிய காரியமா? அதற்கு தேவையான தொழில் நுட்பத்தை அணு உலை ஆபத்து என்று சொல்லும் கம்யூனிஸ விஞ்ஞானி பத்மநாபன் போன்றவர்கள் தருவார்களா?

எப்பொழுதும் கிடைக்கும் சூரிய சக்திக்கே இந்த பாடு என்றால் காற்றாலைகளை பற்றியும் அது தரும் மின்சக்தி பற்றியும் நான் சொல்ல தேவையில்லை. ஆனால் நமது அரசாங்கம் இதை எல்லாம் விட்டு விடவில்லை. மரபு சார் மின்சக்தி மட்டுமே நமக்கு போதாது. அதனால் மரபுசாரா எரிசக்தியையும் நமது அரசாங்கம் ஊக்கபடுத்தி கொண்டு தான் இருக்கிறது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் நாம் உலகின் ஏழாவது இடத்தில் உள்ளோம். இதில் மேலும் குறிப்பிட தக்க விசயம் என்னவென்றால் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் கூடங்குளத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் உள்ள மாநிலங்கள் கடைகோடியில் உள்ளன. குஜராத முதல்வர் நரேந்திர மோதி மாநிலம் அதில் முதல் இடத்தில் உள்ளது.

இது தவிர நீர் மின்சக்தி திட்டத்தை பற்றி இங்கு நான் சொல்லியே ஆக வேண்டும். கம்யூனிஸ கை கூலியும் புனித ஆவிகளுக்கு பிடித்தவரும் 24x 7 ஆங்கில ஊடக ரௌடிகளின் கதாநாயகியுமான மேதா பட்கர் அப்பாவி கிராம மக்களை ஏமாற்றி பிரச்சனை செய்து பல ஆயிரம் ஏக்கர் நில பாசன மற்றும் 3000 MW மின் உற்பத்தி தரும் மின் உற்பத்திக்கு எவ்வாறு முட்டுகட்டையாக இருந்து அப்பாவி கிராம வாசிகளை ஏமாற்றி இந்திய அரசாங்கத்திற்கு எதிராக தூண்டிவிட்டு வன்முறையை உருவாக்கினார் என்பதை மக்கள் மறந்துவிட்டார்களா என்ன? இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மாவோயிஸ்டுகளா மாற்றி சீனாவிடம் இவர்கள் கல்லா கட்டினார்கள் என்பது வேறு விசயம். இந்த பக்கம் அணுமின் சக்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த வெளி நாட்டு கை கூலிகள் அந்த பக்கம் சென்று நீர்மின் சக்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கேட்டால் மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்வது, இதை படம் பிடிக்க Times Now, CNN-IBN மற்றும் NDTV போன்ற வெளி நாட்டு தொலைக்காட்சிகள் வேறு.

இந்த மேதாபட்கர்க்கு உலக அளவில் கொடுக்கப்பட்ட சில விருதுகளே இவர் யார் என்று காட்டு கொடுத்துவிடும், Amnesty International (இங்கிலாந்து உளவு துறையின் பினாமி அமைப்பு) கொடுத்த விருது – Human Rights Defender’s Award Vigil India Movement. (Ecumenical Christian Centre Center) கொடுத்த விருது – M.A. Thomas National Human Rights Award இது தவிர வெளி நாட்டு NGO க்கள் இவருக்கு பல வித விதமான விருதுகளை வழங்கியுள்ளது.

இது மட்டுமா?  இப்பொழுது நீர் மின் சக்தி போன்ற இயற்கை சக்தியை பயன்படுத்தாலாம் என்று அறிவுரை கூறும் இதே கூட்டம் அன்று அருந்ததி சூஸ்னா ராய் அணை கட்டுகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொழுது அவள் பின்பு கோஷ்ம் போட்டது.

சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு மக்கள் இறப்பார்கள் என்று சொல்லும் அதே கூட்டம் கேரளாவில் நிலநடுக்கத்தால் அணை உடையும் என்று சொல்பவர்களை முட்டாள்கள் என்று சொல்கிறார்கள்.

நமது கம்யூனிஸ மற்றும் கிறித்துவ அறிவு ஜீவிகள் இந்தியாவின் மின்சக்தி வரைபடத்தை காட்டி அணு உலையால் நமக்கு வெறும் 3 சதவிகிதம் மின்சக்தி வருவதாகவும் அனல் மின் நிலையம் மற்றும் நீர் மின்சக்தியால் தான் மீதம் உள்ள 80% வருவதாக கூறுகிறார்கள். என்னுடைய கேள்வி இருக்கின்ற மின்சக்தி போதவில்லை என்பதால் தானே இந்த அணு உலை. ஆனால் இந்த அனல் மின்சக்திக்கு ஆதாரமான நிலக்கரி போன்ற எரிபொருட்கள் எதிர் காலத்தில் குறைவாக தான் கிடைக்கும் என்பது இந்த அதிபுத்திசாலிகளுக்கு தெரியாதா? ஒரு அணுமின் நிலையம் கட்ட 10 வருடங்களுக்கு மேல் தேவைபடும் பொழுது இப்பொழுது இருந்தே நாம் தயார் படுத்தி கொண்டால் தானே எதிர் கால பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

சில அறிவு ஜீவிகள் சூரிய மற்றும் நீர் மின் சக்தியை பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதை வைத்து எத்தனை நாள் காலம் தள்ள முடியும். சூரிய மின்சக்தியை வைத்து ஒரு ஐந்து தொழிற்சாலைகளை கூட நடத்த முடியாது. தற்பொழுது நீர்மின் சக்தியை உருவாக்க வேண்டும் என்று சொல்லும் இந்த கூட்டம் ஆக்கபூர்வமான நர்மதா நதி நீர்மின் சக்தி திட்டங்களுக்கு பிரச்சனை செய்வது ஏன்?

சில முட்டாள்கள் ஜெர்மனி இனி அணு உலைகள் கட்ட போவது இல்லை இப்பொழுது உள்ள அணு உலைகளையும் மூட போகிறதுஎன்று சொல்கிறார்கள். ஜெர்மனியின் மக்கள் தொகை என்ன? நமது மக்கள் தொகை என்ன? அவர்களுக்கு தேவையான எரிசக்தியும் நமக்கு தேவையான் எரிசக்தியையும் ஒப்பிடுவது யானையையும் பூனையையும் ஒப்பிடுவதற்கு சமம். இது தவிர அவர்கள் தங்கள் தேவைக்கும் அதிகமாக அணு உலைகளை ஏற்கனவே அமைத்து கொண்டுள்ளனர். இனி எதற்கு அவர்களுக்கு புதிய அணு உலை.  அடுத்து ஜெர்மனி மூடியதாக சொன்ன அணு உலைகளின் பட்டியல் கீழே….

Decommissioned power and experimental reactors

மேலே உள்ள படத்தில் இருக்கும்  தகவல்களை வைத்து ஒரு 10 வகுப்பு பையன் கூட சொல்வான் இது எதானால் மூடப்படுகிறது என்று. இந்த அணு உலைகள் அனைத்துமே மிக பழமையானவை. அது மட்டும் இன்றி பெருமாபாலான அணு உலைகள் ரஷ்யாவால் ஜெர்மனியில் காலனி ஆதிக்கதின் பொழுது கட்டப்பட்டது. அது போன்ற அணு உலைகளையும் ஆய்வு அணு உலைகளையே ஜெர்மனி மூடியுள்ளது. ஆனால் மூடப்படாத அணு உலைகளை பாருங்கள். மூடப்பட்ட அணு உலைகளின் ஒட்டு மொத்த மின்சாரத்தை புதிதாக கட்டியுள்ள அவர்களின் ஒரு அணு உலை பூர்த்தி செய்து விடும்.

German nuclear power units

 

அது சரி பிறகு எதற்காக ஜெர்மனியின் இந்த நாடகம். இதில் அரசியலும் உண்டு, வியாபாரமும் உண்டு.  அணு உலைக்கும் ஈடான அளவு இலாபத்தை தர கூடிய மரபு சாரா எரிசக்தியான காற்றாலை மற்றும் சூரிய தகடுகள் ஜெர்மனியால் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இதை பற்றிய தகவல் பதிவின் முதல் நிலையிலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது.  தங்கள் நிறுவனங்களின் வியாபார நோக்கத்திற்காகவே இவ்வாறு பொய் கதைகளை கட்டி விடுகிறது. இதற்காக தனது மறைமுக படையான பாதரியார் படைகளையும் உபயோகப் படுத்துகிறது. ஜெர்மனி தான் கூடம்குளம் அணு உலை பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன.       

Sonnteg Reiner Hermann என்ற ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் அணு உலை எதிர்ப்புக்கு தலைமை தாங்கும் உதயகுமார் என்ற மேற்கத்திய கிறித்துவ உளவாளிக்கு கோடி கணக்கில் நிதி திரட்டி தருகிறார் என்ற உண்மை சமீபத்தில் வெளி வந்துள்ளது.

http://expressbuzz.com/states/tamilnadu/german-picked-up-for-koodankulam-funds-link/367692.html

மேலும் சோலார் தட்டுகள் உற்பத்திக்கு பெரிய தொழில் நுட்ப அறிவு தேவை இல்லை. இந்தியாவே எந்த நாட்டின் உதவியும் இன்றி அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். ஆனால் வெளி நாட்டு கிறித்துவ நாடுகளின் கம்பெனிகள் இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் நோக்குடன் அதில் உள்ளே நுழைய முயற்சி செய்தன. இதை உணர்ந்த மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. இதை எதிர்த்து கிறித்துவ நாடுகள் தனது ஐரோப்பிய யூனியன் மூலம் கண்டனம் தெரிவித்தது.

மதமாற்றம் என்ன விதமான கேடுகளை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ஏன் என்றால் இங்கு இருக்கும் ஒவ்வொரு பாதரியார்களும் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளின் கட்டுபாட்டில் உள்ளனர். மதத்தை உபயோகித்து எவ்வாறு இலாபம் சம்பாதிக்கிறார்கள் என்ற உண்மை இதன் மூலம் தெரிகிறது. தற்பொழுது 1 மில்லியன் டாலர்கள் மதமாறத்திற்கு செலவு செய்து ஒரு சில வருடங்கள் பிறகு 100 மில்லியன் எடுப்பார்கள். இனி மேலாவது நமது மக்கள் இதை உணர்ந்து மதமாற்ற கிருமிகளில் இருந்து தங்களை பாதுக்காக்க வேண்டும். இல்லாவிட்டால் நமது நாடு ருவாண்டா போன்று ஒரு பெரிய கலவரத்தை சந்திக்க நேரிடும்.

உலகில் நில நடுக்க பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள்

உலகில் அணு உலைகள் உள்ள பகுதிகளின் வரைபடம்

 
நம்மை விட மிக மோசமான நிலபகுதிகளை கொண்ட ஐரோப்பாவிலேயே எத்தனையோ அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கும் பொழுது அதை விட பல மடங்கு பாதுகாப்பான நமது நிலப்பரப்பில் இருக்கும் அணு உலைகளுக்கு என்ன பிரச்சனை வந்து விட போகிறது.
 

மேலே உள்ள படங்களே போதும் இந்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் மதவாத கூட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள. கூடங்குளத்தில் உள்ள கிறித்துவர்களை பாதுகாக்க தான் கத்தோலிக்க அமைப்புகள் போராடுவதாக சிலர் சொல்கிறார்கள். ஒரு இந்திய மாநிலத்தின் அளவே இருக்கும் பல ஐரோப்பிய கத்தோலிக்க நாடுகள் இந்தியாவிற்கு இணையாக அணு உலைகளை வைத்து உள்ளனவே? அவற்றை எல்லாம் மூட வேண்டும் என்றும் அங்குள்ள கத்தோலிக்க மக்களை காப்பாற்ற வேண்டும் என்று போப் ஏன் போராடவில்லை. ஒரு வேலை ஆப்பிரிக்காவில் பசிக்கு போராடும் மதம் மாறிய கிறித்துவர்களுக்கு உதவி செய்யாமல் இந்தியாவில் இருக்கும் மக்களை மதம் மாற்ற பணத்தை கொட்டுவதை போல் மதம் மாறிய கத்தோலிக்க ஐரோப்பிய கிறித்துவர்கள் செத்தால் நமக்கு என்ன மதம் மாறி கொண்டு இருக்கும் இந்தியர்கள் தான் முக்கியம் என்று கத்தோலிக்க வாடிகன் நினைக்கிறதோ என்னமோ?

அணு ஆயுத சக்தி இல்லாததால் நாம் 1962ல் சீனாவிடம் இழந்தது மிக அதிகம். மீண்டும் அது போன்ற சூழ்நிலையை தவிர்க்கவும், எதிர்காலத்தில் நிலக்கரி போன்ற வளங்கள் குறைபாட்டால் நமக்கு ஏற்படக் கூடிய மிகப் பெரிய மின்சார பற்றாகுறையை தவிர்க்கவும் அணு உலைகள் மிக அவசியம். அதை விட அவசியம் நமது நாட்டில் மர்மமான முறையில் தற்கொலை என்ற பெயரில் இறந்து கொண்டு இருக்கும் நமது விஞ்ஞானிகள்.

கூடங்குளம் நாட்டின் கடை கோடியில் மிக பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணு உலை நாட்டின் கடை கோடியில் அதாவது இந்திய பெருங்கடலில் நமது பாதுகாப்பையும் ஆளுமையையும் அதிகரிக்க கூடியது. இன்னும் 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய மிக பெரிய எரிசக்தி பற்றாக்குறையை (அதாங்க அனல் மின்சக்தி, நீர் மின்சக்தி, பெட்ரோல்) தீர்க்க மிகவும் அவசியம். அது மட்டும் இன்றி இந்த கூட்ங்குளம் அணு உலை மூலமாக தான் நாம் வருங்காலத்தில் அணு ஆயுதங்கள் தயாரித்து நமது நாட்டையும் வீட்டையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள இயலும்.

உலகிலேயே மிகப் பெரிய யுரேனிய கனிமவளம் ஆந்திராவில் (49000 டன்) உள்ளது என்பதை மத்திய அரசு வெளியிட்டது. இந்த யூரேனியம் மற்றும் ராம சேதுவினால் நமக்கு கிடைக்கும் கடற்கரை கனிம வளத்தின் மூலம் நமது எதிர் கால மின்சக்தி தேவை பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பும் நமக்கு கிடைத்து உள்ளது

வெளி நாட்டு தீய சக்திகளுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே உதயகுமார் மற்றும் கிறித்துவ மிஷினரிகள் செயல்படுகின்றன. இந்தியாவை முடமாக்க முயலும் இவர்களின் முயற்சியை முறியடிக்க சாதி மதம் மொழி என்று வேறுபாடு பாராமல் நாம் ஒன்றினைந்து போராட வேண்டும். அணு உலை மின்சாரம் மட்டும் அல்ல. அணு ஆயுதமும் நமக்கு மிக அவசியம். இது அடுத்தவரை தாக்க அல்ல. நம்மை பாதுகாக்க….

“பாம்பு தன்னிடம் விஷம் இல்லாவிட்டாலும் அது விஷம் உள்ளதாக காட்டி கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அதை கொன்று விடுவார்கள்” – சாணக்கியர்

ஊழலை சமாளிப்பது எப்படி? – காங்கிரஸ்

பல இலட்சம் கோடி ஊழல்கள் நடந்தும் அதை சர்வ சாதாரணமாக ஊதி தள்ளுகிறது காங்கிரஸ். இந்த ராஜ தந்திரத்தை…sorry இந்த 420 வித்தையை எவ்வாறு செய்கிறது. வாங்க தெரிஞ்சகலாம்..

ஒரு காலத்தில் அத்வானி காங்கிரஸ் கட்சி மீது ஹவாலா மோசடி பற்றி குற்றம் சாட்டினார். கடைசியில் அவர்கள் மீதே ஹவாலா மோசடி செய்தார் என்று கேஸ் போட்டது காங்கிரஸ்.

CWG விளையாட்டு போட்டி ஊழலில் 40000 கோடி ஊழல் செய்தது காங்கிரஸ். அதை எதிர்த்து போராடியது BJP. உடனே அந்த காமன்வெல்த் போட்டிக்கு 1.5 கோடி அளவில் அலங்காரம் செய்த ஒருவர் BJP காரர் என்று கூறி அதில் ஊழல் நடந்ததாக அவர் வீட்டில் CBI விட்டு சோதனை செய்தது.

1.76 இலட்சம்… கோடி 2G ஊழல் செய்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடினால், பத்து வருடங்கள் முன்பு பாஜக ஆட்சியிலும் ஊழல் நடந்தது என்று கூறி அவர்கள் மீது CBI விட்டு கேஸ் போட்டது.

கொஞ்ச நாள் முன்னாடி ராம தேவ் கருப்பு பணத்திற்கு எதிராக போராடினார். கடைசியில் அவரே கருப்பு பணம் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தியது.

இப்பொழுது அன்னா ஹசாரே குழு ஊழலுக்கு எதிராக போராடுகிறது. வழக்கம் போல அவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்கிறது.

அனேகமாக BJP இல்  ஒரு கருப்பு பண முதாலாளியை இணைத்து விட்டு பாஜாகவும் கருப்பு பணம் வைத்துள்ளதாக கூறி பிரச்சாரம் செய்யும்.

காங்கிரஸின் வெளி நாட்டு கருப்பு பணத்தில் பயன் பெறும் வெளி நாட்டு மீடியாகளை அப்பாவி இந்தியர்கள் நம்பும் வரையில் இந்த பல இலட்சம் கோடிஊழல் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை காங்கிரஸ் கட்சிக்கு. இது ஒரு கசப்பான உண்மை.

http://www.mediacrooks.com/

Categories: Uncategorized

பைத்தியமாக்கப்பட்ட ஒரு அப்பாவி இந்தியன்

 

தமிழினத்தையே அழிக்க கூடிய கூடம் குளம் அணு உலையை தடுக்க கோரி மன்மோகனிடம் மனு கொடுக்க சென்றேன்.   அதிஷ்டவசமாக எனக்கு அனுமதியும் கிடைத்தது. ஏற்கனவே தோழர்கள் புத்தகம் அதிகம் படித்ததன் காரணமாக பேசுவது ஒன்றும் பெரிதான விசயம் அல்ல. என்னுடைய பேச்சை கேட்டு ஆச்சரியம் அடைந்த மன்மோகன் சிங், அணு உலையில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா என்று ஆச்சரியப்பட்டு, உடனடியாக அந்த திட்டத்தை நிறுத்துவதாகவும் அதற்கு முன் வேறு முறையில் எரிசக்தி உருவாக்கும் முயற்சியை பற்றிய ஒரு ஆய்வை மேற் கொள்ளுமாறு என்னிடம் கேட்டு கொண்டார். இதற்காக ஒரு 500 கோடி நிதியையும் வழங்கினார். அணு சக்தி போன்ற ஆபத்து இல்லாத மின் சக்தி உற்பத்தி செய்யும் விசயங்களை பட்டியலிட்டேன்.

முதலில் நான் தேர்ந்தெடுத்தது நீர் மின்சக்தி. சரி நீர் மின் சக்தி வேண்டும் என்றால் அணை கட்ட வேண்டும். அதனால் நதியில் அணை கட்டலாம் என்று போனேன். அணை கட்டினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்க படும், அவர்களால் காலம் காலமாக வாழ்ந்த பகுதியை மத்திய ஏகாதிபத்திய அரசு ஆக்கிரமிக்கறது. அதனால் அணையை கட்ட விடமாட்டோம் என்று மேத்தா பட்கர் தலைமையில் தோழர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால் அந்த திட்டத்தை கைவிட்டேன்.

 

 அடுத்து அனல் மின் சக்தியை பயன் படுத்தாலம் என்று அதற்கான திட்ட வரைவை உருவாக்கலாம் என்று போனேன். அங்கு சென்றால் நீர் மின் சக்தியை விட அங்கு பிரச்சனை அதிகம். முதலில் எழைகள் நிலங்களை அரசாங்கம் பிடுங்க பார்க்கிறது என்று என்னை தோழர்கள் தடுத்தார்கள். நிலக்கரி போன்ற பொருட்களை எடுக்க போனால்  பழங்குடியினர் வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்று செங்கொடி ஏந்திய மக்கள் சூஸ்னா அருந்ததி ராய் தலைமையில் போராடினார்கள்.அதானல் அந்த திட்டத்தையும் கை விட்டேன்.

 

 சரி இது எல்லாம் வேண்டாம் பிரச்சனையே இல்லாத சோலார் தட்டுகளை உருவாக்கலாம் என்று அதிகாரிகளை கேட்டேன். அதற்கும் அதிக அளவு நிலக்கரி தேவை படுகிறது. அதற்கும் தோழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அது தவிர நம்மிடம் அதை உருவாக்கும் தொழில் நுட்பம் கிடையாது. இதை வெளி நாட்டில் இருந்த தான் கொண்டு வர முடியும். வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்கும் வருவதை தோழர்கள் விரும்ப மாட்டார்கள். அது மட்டும் இன்றி இதற்கும் மிக பெரிய இடம் தேவை. இதற்கும் கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்துவார்கள். அப்புறம் பிரிந்தா கரத் சிகப்பு சேலையை கட்டி கொண்டு விஜய் மாதிரி ஒரு காட்டு காட்டுவார் பரவாயில்லையா என்றார்கள். அதனால் அந்த திட்டத்தையும் கை விட்டேன்.

 

 சரி சானியில் இருந்தாவது மின்சாரத்தை தயாரிக்கலாம் என்று மாட்டு பண்ணை வைத்து  மாடுகளை கொல்லவதை தடுக்கும் சட்டம் கொண்டு வந்தால் இது பார்பணீய சட்டம். ஹிந்து பாசிஸ்டுகளின் இந்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அலுவலம் முன்பு மாட்டு கரியோடு உட்கார்ந்து கொண்டார்கள்.

 மேற்கத்திய நாடுகளை போன்று நாமும் பிற நாட்டின் வளத்தை ஆட்டைய போடலாம் என்று இராணூவ அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். இதை கேட்ட அவர் கேக்க பெக்க என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார். காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலத்தில் ஆயிர கணக்கான மக்களை கொல்லும் பிரிவினை வாதிகளை கைது செய்தாலே மனித உரிமை என்று கொடி பிடிக்கும் கம்யூனிஸ்டு தோழர்கள் அடுத்த நாட்டை தொட்டால் சும்மாவிடுவார்களா? அதுவும் சுற்றி இருப்பது முஸ்லீம் நாடு. ஓட்டு வங்கி பாதிக்கும் என்று உங்களை ஒரு வழி செய்து விடுவார் கம்யூனீஸ்டு தலைவர் ப்ரகாஸ் கரத்தும் அவருடைய சகல ப்ரனாய ராயின் தொலைக்காட்சி NDTV யும்  என்று என்னை எச்சரித்தார்.

 

 இது எல்லாம் வேண்டம்… மக்கள் தொகையை குறைத்து இருக்கிற மின்சாரத்தை யாவது ஒழுங்காக பயம் படுத்தலாம் என்று நினைத்தால் இது சிறுபானமைக்கு எதிரான திட்டம். யார் எத்தனை குழந்தைகள் பெற்று கொள்வது எத்தனை திருமணங்கள் செய்து கொள்வது போன்றவை அவரவர் விருப்பம். இது சிறுபானமை மத சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என்று கூறி நரேந்திர மோடி போல் உங்களையும் மத வெறியன் என்று சொல்வார்கள். இது தவிர இதனால் ஏற்படும் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடும் சிறுபானமை சமூகத்தவர் யாராவது காவல் துறை சுட்டு கொன்றால் உங்களை ஹிட்லராக்கி உங்களுக்கு அமெரிக்க விசா கிடைக்காமல் செய்துவிடுவார்கள்…

 சரி காற்று மூலமாவது மின்சாரம் தயாரிக்கலாம் என்றால் அதில் வரும் மின்சாரம் போதாது. அதுவும் தவிர அது தொடர்ச்சியாக மின்சாரம் தறாது. அப்படி மின்சாரம் ஒழுங்காக வராவிட்டால். சாலை மறியல் செய்து உங்கள் உருவ பொம்மையை எரிப்பார்கள் என்றார்கள்.

 

இப்படி முன்ன போன உதைக்கிராங்க, பின்ன வந்தா கடிக்கராங்க… இப்படி எந்த பக்கம் போனாலும் போராட்டம் நடத்துறாங்களே இதற்கு எதாவது தீர்வு காண யோசித்து யோசித்து பைத்தியம் ஆனேன். தற்பொழுது தான் கொஞ்சம் தெளிந்து உள்ளேன். தயவு செய்து கம்யூனிஸ்டு கழுதைகள் பேச்சை கேட்டு சிந்திக்க தொடங்கி எதாவது செய்ய தொடங்கினால் என்ன போல நீங்களும் பைத்தியம் ஆக நேரிடும் ஜாக்கிரதை…

 

 – இப்படிக்கு

முன்னாள் கழுதை (தோழர்)

Categories: Uncategorized